உச்ச நடிகரின் உயிருக்கு ஆபத்து? உளவுத்துறை வார்னிங் : Y+ பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 11:22 am

உச்ச நடிகரின் உயிருக்கு ஆபத்து? உளவுத்துறை வார்னிங் : Y+ பிரிவு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பரபரப்பு!!

பாலிவுட்டில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் வெளியான ஜவான், பதான் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானின் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதனால் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, மகாராஷ்டிராவின் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

மேலும் இந்தியா முழுவதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவரது வீட்டிற்கு 4 துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்படுள்ளது.

இந்தியாவில் ஆயுதம் ஏந்திய தனியார் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அனுமதி இல்லாத நிலையில், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சமீப காலமாக ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு Y+ பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?