நைட் நேரத்தில் அத பண்ண சொல்லி டார்ச்சர்: மகாலக்ஷ்மியை விவாகரத்து… ரவீந்தர் புலம்பல்!

Author: Rajesh
9 December 2023, 7:43 pm

தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது. இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.

raveendhar

ரவீந்திரன் – மகாலக்ஷ்மி ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்து வந்தார்கள். இதனிடையே 16 கோடி ரூபாய் பெற்று ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனைவி மகாலக்ஷ்மி குறித்து பேசிய அவர், என் மனைவி அவள் நடித்த அன்பே வா சீரியலை பார்க்க சொல்லி ரொம்ப டார்ச்சர் செய்தார். நைட்டு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த சீரியலை பார்ப்பது ரொம்ப கொடுமை. அந்த சீரியலை மட்டும் நான் முன்னாடியே பார்த்திருந்தால் அவளை அப்போவே விவாகரத்து செய்திருப்பேன் என புலம்பித்தள்ளியுள்ளார் ரவீந்தர்.

  • dhanush kuberaa movie first day collection report எங்க தாவுறது நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- “குபேரா” படத்தின் பரிதாபகரமான வசூல் நிலவரம்!