அடுத்த தேர்தல்ல நாங்க யார்னு காட்றோம்-கெத்தா பேசிய சுரேஷ் மூப்பனார்!

Author:
29 June 2024, 8:04 pm

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும் – த.மா.க மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் மூப்பனார் திருச்சியில் பேட்டி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சுரேஷ்மூப்பனார் தலைமையில் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சுரேஷ்மூப்பனார் தெரிவித்ததாவது,

பெருந்தலைவர் காமராஜர் 122வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரசின் சார்பில் திருச்சி உழவர் சந்தையில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிறந்தநாள் விழா தலைமையில் நடைபெற உள்ளது.இந்த பிறந்தநாள் விழாவில் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் தமிழக கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 1/2 வருடம் இருக்கிறது. எனவே அதற்கான ஆயத்தங்களை தேர்தல் நேரத்தில் தலைவர் நடவடிக்கை எடுப்பார். அடுத்த சட்டமன்றத்தில் தவிர்க்க முடியாத கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்கும்.நடிகர் விஜய் நல்ல தலைவர்கள் தேவை என கூட்டத்தில் பேசியுள்ளார் என்ற கேள்விக்கு ஜனநாயகத்தில் நல்ல தலைவர்கள் வரவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.எங்கள் தலைவர் ஜி.கே.வாசன் நல்ல தலைவரே தூய்மையான, எளிமையானவர் தலைவர் தான் மக்கள் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!