பாஜக நிர்வாகி கொலை வழக்கில் டுவிஸ்ட்.. திமுக ஊராட்சி தலைவர் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
9 January 2025, 12:15 pm

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு, திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 4 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

இதையும் படியுங்க: மருதமலைக்கு போறீங்களா? பொங்கலை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் திடீர் கட்டுப்பாடு!

வேலூர் மாவட்ட பா.ஜ.க ஆன்மிகப் பிரிவின் வேலூர் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தவர் நாகல் கிராமத்தை சேர்ந்த விட்டல்குமார் (47). இவர் கடந்த 16-ம் தேதி சாலையோரம் விபத்தில் சிக்கியது போல் மீட்கப்பட்ட நிலையில் விசாரணையில் கொலை என்றும் முன்விரோதம் காரணமாக அடித்துப் போட்டுவிட்டு விபத்து போல் செட் செய்து நாடகமாடியதும் தெரியவந்தது.

Dmk Executive arrest under Goondas Act in Bjp Executive Murder Case

இக்கொலை தொடர்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நாகல் ஊராட்சி மன்றத் தலைவரான பாலாசேட், அவரது மகன் தரணிகுமார், கூட்டாளிகள் கமலதாசன், சந்தோஷ் ஆகிய 4 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பரிந்துரையின் பேரில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!