ராத்திரில எனக்கு பொண்டாட்டிதான், மத்தவங்களுக்கு எப்படி?- கொதித்தெழுந்த சரத்குமார்! ஏன் இப்படி?

Author: Prasad
23 April 2025, 1:53 pm

மனைவியிடம் கேட்ட சரத்குமார்?

கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார். ஒரு நாள் இரவு 2 மணிக்கு தனது மனைவி ராதிகாவுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். இவர் அவ்வாறு கூறியதை இணையவாசிகள் ட்ரோலுக்குள்ளாக்கினார்கள். இதனை கேலி செய்து பல மீம்களும் வெளிவந்தன. 

sarathkumar angry on the troll for asking about merging his party to his wife

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரத்குமார் இதனை குறித்து மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார். 

மனைவியிடம்தானே கேட்டேன்

“நான் எப்போதும் அரசியல் முடிவுகள் குறித்து ராதிகாவிடம் கேட்டது கிடையாது. ஆனால் ஒரு நாள் இரவு கட்சியை இணைப்பது குறித்தான சஞ்சலத்தில் உட்கார்ந்திருந்தபோது ‘ஏன் இப்படி தூங்காமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என கேட்டார். இதனை பலரும் கூட ஏளனமாக பேசினார்கள்.

sarathkumar angry on the troll for asking about merging his party to his wife

நள்ளிரவில் மனைவியிடம் கேட்காமல் வேறு யாரை கேட்பார்கள். இந்த மக்களை நான் என்ன சொல்ல முடியும். நள்ளிரவில் யார் நம் அருகில் இருப்பார்? நமது மனைவிதானே இருப்பார். மற்றவர்களுக்கு வேண்டுமென்றால் நள்ளிரவில் வேறு யாராவது இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி கிடையாது” என மிகவும் ஆதங்கத்தோடு பேசினார். சரத்குமார் அவ்வாறு பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • muththa mazhai video song in thug life movie released now நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்