தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!
Author: Prasad30 April 2025, 5:34 pm
கார்த்தி-தமன்னா ஜோடி
“பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே சொல்லலாம். இருவரும் ரசிகர்களின் கண்கவரும் ஜோடியாக அத்திரைப்படத்தில் வலம் வந்தனர்.

இந்த நிலையில் கார்த்தி-தமன்னா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும் அவர்களது காதலுக்கு சிவகுமார் பெரிய தடையாக இருந்ததாகவும் கூறுகிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளரான சபிதா ஜோசஃப்.
கார்த்தியை மிரட்டி திருமணம்?
அதாவது “பையா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது கார்த்திக்கும் தமன்னாவிற்கும் இடையே நெருங்கிய பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் காதலித்த விஷயம் சிவகுமாருக்கு தெரியவந்த நிலையில் சிவகுமார் கார்த்தியிடம், “உன் அண்ணனுக்கே ஊர்க்காரப் பொண்ணைத்தான் கட்டிவைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது என்னால் முடியவில்லை. ஆதலால் நீ ஒரு நடிகையை திருமணம் செய்ய நான் அனுமதிக்கமாட்டேன்” என கண்டித்தாராம்.

இதனை தொடர்ந்துதான் தனது ஊரில் ஒரு பணக்காரப் பெண்ணை பார்த்து கார்த்திக்கு திருமணம் செய்து வைத்தாராம் சிவகுமார். இவ்வாறு சபிதா ஜோசஃப் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
சூர்யா-ஜோதிகா காதலுக்கும் சிவகுமார் மிகப்பெரிய தடையாக இருந்தார். ஆனால் அத்தடைகளையும் மீறி அவர்கள் இருவரும் காதலில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.