குளியலறையில் ரகசிய மேகரா.. மிசோரத்தில் இருந்து கண்டு ரசித்த ராணுவ வீரர் : குமரியில் டுவிஸ்ட்!
Author: Udayachandran RadhaKrishnan19 May 2025, 1:57 pm
கன்னியாகுமரி ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது பெண் கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள வலை கம்பெனியில் பணியாற்றினார்.
பெண்ணின் உறவினரான மதுராஜா என்பவர் ஈத்தாங்காடு பகுதியில வசித்து வருகிறார். அவ்வப்போது உறவினர் என்ற முறையில் பெண்ணின் வீட்டுக்கு வந்து செல்வார். மது ராஜா ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக உள்ளார்.
இதையும் படியுங்க: அதிமுக – பாஜக கூட்டணி என்பது கூட்டணியா? விசிக எம்பி திருமாவளவன் விமர்சனம்!
2023ஆம் ஆண்டு அந்த பெண் புது வீடு கட்டி கிரகபிரவேசத்துக்கு அனைவரையும் அழைத்துள்ளார். வீட்டு விஷேத்துக்கு வந்த மதுராஜா, அந்த பெண்ணின் குளியலறையில் கேமராவை பொருத்திக் கொணடு மீண்டும் மிசோரம் மாநிலத்துக்கு சென்றுள்ளார்.
2 வருடமாக அந்த பெண் குளிப்பதை தனது ரகசிய கேமராவில் பதிவானதை செல்போன் வழியாக பார்த்து ரசித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த மது ராஜா, வழக்கம் போல அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது தன்னுடைய செல்போனில் பதிவான குளியலறை காட்சிகளை பெண்ணிடம் காட்டி உல்லாசமாக இருக்க சொல்லி மிரட்டியுள்ளார். பயந்து போன அவர் மதுராஜாவுக்கு பணியவே இல்லை.
இதனால் தனது நண்பர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளார் மதுராஜா. திகைத்து போன பெண், உடனே காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து மது ராஜாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடித்துள்ளார்.