காசா கிராண்ட் கட்டிடத்தை இடிக்க தயக்கம் ஏன்? பணக்காரர்களை கண்டால் தமிழக அரசு பதுங்குவது ஏன்? சிபிஎம் கேள்வி!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2025, 10:33 am

சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில், பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரை பகுதி மக்கள் கடும் எதிர்ப்புக்கு நடுவில் இந்த பணி நடந்து வருகிறது.

குறிப்பாக அனகாபுத்தூரில் உள்ள டோபிகானா, தாய் மூகாம்பிகை நகர் சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க: காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்… பாமக பிரமுகர் கைது!!

நீர்ப்பிடிப்பு பகுதியில் சுமார் 593 வீடுகள் இருப்பதால், அங்கு வசிப்பவர்களை அப்புறப்படத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடந்த 6 நாட்களாக ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.

450க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது வரை இடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசித்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு சார்பில் கீழ்ப்பாக்கம்,பெரும்பாக்கம் பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனகாபுத்தூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.

விசிக தலைவர் திருமாவளவன், குடியிருப்புகளை அப்புறப்படுத்தாமல் மக்கள் அங்கேயே வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலாளரை சந்திக்க உள்ளதாக கூறினார்.

இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

Why does the Tamil Nadu government hide when it sees rich people.. CPM questions

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டி இருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்? ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? என குறிப்பிட்டுள்ளார்.

  • karnataka government secured for thug life movie release கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!