மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்து பலி.? துருவி துருவி விசாரிக்கும் போலீசார்!
Author: Udayachandran RadhaKrishnan2 June 2025, 4:31 pm
மூன்றாவது மாடியில் விளையாடிய 12 வயது சிறுவன் தவறி விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதையும் படியுங்க: அரசியலில் சாதித்த எடப்பாடியை பேச ஆதவ் அர்ஜூனாவுக்கு தகுதி இருக்கா? கௌதமி ஆவேசம்..!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான் குப்பம் கிராமத்தில் மகேந்திரன் என்பவரின் மகன் பாஸ்கர் வயது 12 சிறுவன் வீட்டில் நேற்று மூன்றாவது மாடியில் விளையாடிய போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
சென்னை ஸ்டான்லி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் மூன்றாவது மாடியில் விளையாடிய போது தவறி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது சிகிச்சை பயலின்றி 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.