நாங்க 35 வருஷமா பேசற அரசியலை நீங்க 2 நிமிட பாடலில் சொல்லிட்டீங்க… வேடனை பாராட்டிய திருமாவளவன்!
Author: Udayachandran RadhaKrishnan4 June 2025, 1:15 pm
தற்போது இணையத்தில் தீயாய் பரவி வரும் வீடியோவில் வருபவர்தான் வேடன். கேரளாவை சேர்ந்த ராப் பாடகரான இவர் சமூக பிரச்சனைகளை குறித்து கூர்மையான வரிகளை போட்டு பாடி வருகிறார்.
நான் பாணன் அல்ல, பறையன் அல்ல, புலையன் அல்ல என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக பாடி வருகிறார். அவர் பாடிய முதல் ஆல்பமான Voice of the Voice Less கவனம் பெற்றது,
இதையும் படியுங்க: அண்ணாமலை அதிரடி அரசியல்.. என்னுடையது அமைதியான அரசியல் : நயினார் நாகேந்திரன் பதில்..!!
மஞ்சும்மல் பாய்ஸ், All we imagine us light போன்ற படங்களிலும் பாடியுள்ளார். இவரது பாடலுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்து மதத்தையும், பிரதமர் மோடியையும் வேடன் அவமதிக்கிறார் என புகார் அளித்தனர்.
ஆனால் வேடனுக்கு இணையவாசிகளின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிற வருகிறது. இந்த நிலையில் வேடனுக்கு வீடியோ கால் செய்து பாராட்டியுள்ளார் திருமாவளவன்.
காரில் சென்று கொண்டே வேடனுக்கு வீடியோ கால் செய்த திருமாவளவன், வீட்டில் அனைவரும் நலமா என விசாரிக்க, தாய் தவறி 4 வருடங்கள் ஆவதாகவும், தந்தை கூலித்தொழிலாளி, அவர் வேலைக்கு செல்லாமல் இருக்க மாட்டார் என கூறுகிறார்.

பின்னர் எந்த கேரளாவில் எந்த ஊர் என கேட்க, திருச்சூர் டவுனில் இருந்து 8 கிலோ மீட்டரில் வீடு உள்ளது. நீங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும் என வேடன் அழைக்க, அடிக்கடி கேரளா வருவேன் என திருமாவும் கூறுகிறார்.
Viduthalai Chiruthaigal Katchi (VCK) leader @thirumaofficial interacted with rapper Vedan via video call, appreciated his revolutionary songs, and encouraged him to continue creating more pic.twitter.com/gwFGS73moa
— South First (@TheSouthfirst) June 3, 2025
பின்னர் நாங்கள், 35 வருஷமாக பேசிக்கொண்டிருப்பதை 2 நிமிட பாடலில் சொல்லி இருக்கீங்க, நீங்கள் சொல்லக் கூடிய கருத்து புரட்சிகரமாக உள்ளது என திருமாவளவன் பாராட்டினார்.