திருப்பதி லட்டில் கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பம்.. ரசாயனம் கலந்த பாமாயிலை வழங்கிய பிரபல நிறுவனம்!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2025, 6:59 pm
திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனம் மீது புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதையும் படியுங்க: உடைந்தது நட்பு… டிரம்புக்கு எதிராக தனிக்கட்சி தொடங்கும் எலான் மஸ்க்..!!!
இந்த நிலையில் நெய்க்கு பதில் ரசாயனம் கலந்த பாமாயிலை திருப்பதி வேதஸ்தானத்திற்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த போலே பாபா நிறுவனம் வழங்கியது சிபிஐ விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இந்த நிறுவனத்தை தேவஸ்தானம் பிளாக் லிஸ்டில் செய்துள்ளதால் ஏஆர் டெய்ரி என்ற பெயரை பயன்படுத்தி மோசடியாக ஒப்பந்தம் செய்து விநியோகித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை சிபிஐ கைது செய்துளள்து.
ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஜாமீன் வழங்கக்கூடாது ன சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது,