வாரச் சந்தையில் வியாபாரம் செய்த மூதாட்டிக்கு மிரட்டல்.. திமுக நிர்வாகி அட்டூழியம்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2025, 2:13 pm

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அமைத்து வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர்.

இந்த கடைகளை திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் கடைக்குத் தகுந்தார் போல் ரூபாய் 100 முதல் 200 வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இதே போல செவ்வாய்க்கிழமை கடைகள் அமைத்து வியாபாரம் நடைபெற்று வந்த போது வயதான மூதாட்டி ஒருவர் சிறிய தட்டுகளில் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அங்கு வந்த குத்தகைதாரரும் ஆனைமலை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகி சந்தோஷ்குமார் என்பவர் இங்கெல்லாம் கடை போடக்கூடாது என அந்த மூதாட்டி இடம் ஓசியில கடை போடுவியா? என பணம் கேட்டு வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் திட்டி கடையை எடுக்குமாறும் மேலும் மிளகாய் வைக்கப்பட்டிருந்த தட்டுகளை தூக்கி எரிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

Threatening an old woman who did business at the weekly market.. DMK executive's atrocity

செய்வதறியாத அந்த மூதாட்டி அழுது புலம்பியுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தற்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் தெருவோர வியாபாரி முறைப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் மாநில அரசின் விதிகளின் கீழ் என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

  • vijayakanth artificial intelligence cameo role is poor said by famous critic விஜயகாந்தை கேவலப்படுத்திட்டாங்க? இதை AI னு சொன்னா AI-ஏ நம்பாது? படை தலைவன் பார்த்து கடுப்பான பிரபலம்…
  • Leave a Reply