110 பேர் பலி..குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்த விமானம்.. சடலத்தை தூக்கி செல்லும் சோக காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2025, 3:39 pm
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொங்கி விபத்துக்குள்ளானது.
மேகனி நகரில் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. ஓடுதளத்தில் இருந்து மேலே எழும்பும் போது விமானம் கீழே விழுந்துள்ளது.
242 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். லண்டன் புறப்பட்ட போயிங் 787 விமானத்தில 242 பயணம் செய்துள்ளனர்.
அகமதாபாத்தில் இருந்து 1.17 மணிக்கு புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறங்கும் முயற்சியின் போது விமானம் கீழே விழுந்து தீ பிடித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான விபத்து நடந்த இடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து காயங்களுடன் ஏராளமானவர்கள் அருகில் உள்ள மருத்துவமைனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
விமான விபத்தில் தற்போது வரை 110 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமான விபத்து காரணமாக அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குஜராத் அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கிய பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சி#UpdateNews | #AirIndia | #Gujarat | #ExChiefMinister | #planecrash | #LatestNews | #TodayTamilNews | #UpdateNews360 pic.twitter.com/PlfVx9Q5YL
— UpdateNews360Tamil (@updatenewstamil) June 12, 2025
விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும் விபத்து நடந்த இடத்தில் சடலங்களை தூக்கி செல்லப்படும் காட்சிகளும் வெளியாகி உள்ளன.