சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!
Author: Udayachandran RadhaKrishnan20 June 2025, 2:33 pm
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
இதையும் படியுங்க: ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சரத் என்பவர் பேசும்போது இந்து முன்னணியைச் சேர்ந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இந்து முன்னணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் இருவரையும் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி கலைத்து சென்றனர்.
இதனுடைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த சரத் என்பவர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.
