முருகர் மாநாட்டுக்கு மனித சங்கிலி நடத்தும் திருமாவளவன் ஏன் வேங்கைவயலுக்கு நடத்தவில்லை? தமிழிசை கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan20 June 2025, 4:22 pm
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்
வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்
11 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் சாதனையை வலியுறுத்தி மத்திய அரசின் பல்வேறு சாதனை விளக்கக் கண்காட்சியைமுன்னாள் பாஜக தலைவரும் முன்னாள் ஆளுநரமான தமிழிசை சவுந்தர்ராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சி பார்வையிட்டார்.
தமிழகத்தின் தொன்மையை உலகிற்கு அறிவித்தது பாஜக அரசு நீங்கள் இல்லை கீழடி வந்ததற்கு காரணம் பாஜக, 11 புதிய மருத்துவ ண கல்லூரிகள் வரக்காரணம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாஜக வால் மட்டுமே உதவிட முடியும்.
இதையும் படியுங்க: சிபிஎம் – இந்து முன்னணியினர் இடையே கைக்கலப்பு : சிபிஎம் பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி!
100 நாள் வேலைவாய்ப்பு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது குறித்து கேள்விகள் கேட்டால் அதனை தராமல் மத்திய அரசை குறை சொல்கிறார்கள்
100 நாள் பணியில் அவர்களுக்கு வழங்கப்படும் நிதியை குறைத்து வழங்குகின்றனர் அதை முழுமையாக வழங்க பாரதப் பிரதமர் நினைக்கிறார்.
அன்புமணி ராமதாஸ் பிரச்சனை பாசப் போராட்டம் என்றும் அரசியலுக்கு திரும்பி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழகத்தில் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நினைவு கொண்டிருக்கிறது. பக்தர்கள் யாத்திரை செல்லலாம் ஆனால் யாத்திரை செய்த டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மனிதச்சங்கிலி போராட்டம் நடத்து திருமாவளவன்இ வேங்கை வயல் பிரச்சனைக்கு ஏன் நடத்தவில்லை. திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் ஆகும் ஆசை உள்ளது.
முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை. மருத்துவர்கள் பற்றாக் குறை உள்ளது. 35 புதிய கல்லூரிகளில் ஆசிரியர்கள்வ நியமிக்கப்படாமல் கல்லூரியை திறக்கிறார்கள். தோல்வி அடைந்த அரசாக உள்ளது. நிரந்தரப்பணிக்கு தற்காலிக ஆசிரியர்கள் போராடுகிறார்கள்
அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார். இந்தி கூட்டணிக்கு ஓட்டை விழா ஓட்டும் விழா தான் என்றும் தயாநிதிமாறன் குடும்பத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது வெளியே வரும். லாபம் குறித்த விவரங்கள் வெளியே வரும்
மாப்பிள்ளை அவர்தான் சட்டை அவர்தான். 10 லட்சம் கோடியை மத்திய அரசு தமிழக அரசு கொடுத்துள்ளது. வந்தே பாரத் ரயில் தமிழகத்திற்கு அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மக்களுக்கு கொடுக்கின்ற அரிசியை கூட விநியோகிக்க போதிய கட்டமைப்பு இல்லை
காவல்துறையினரே கைது செய்யப்படுவது நீதிமன்றங்கள் கண்டிப்பது கவலை அளிக்கிறது என்றும் வேங்கை வயல் கள்ளக்குறிச்சி விவகாரங்களில் காவல்துறை கண்ணாம்பூச்சி விளையாடுகிறது என்றும் தெரிவித்தார்.