டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!
Author: Udayachandran RadhaKrishnan21 June 2025, 6:34 pm
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும்.
இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!
அப்படி மளிகை பொருட்களை ஆர்டர் செய்யும் ஆஃப் தான் ஜெப்டோ. சென்னை மடிப்பாக்கத்த சேர்ந்த பெண் ஒருவர் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த பொரளை டெலிவரி செய்ய வந்த கோபிநாத் என்ற நபர் மளிகை பொருட்களை கொடுத்துவிட்டு வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டுள்ளார்.

பின்னர் மொபைல் சார்ஜ் போட வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பெண்ணும் அனுமதி அளித்தார். இதையடுத்து சார்ஜ் போட வந்த கோபிநாத், பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே ஓடி வந்த அந்த நபரை விளாசி தள்ளினர். இதையடுத்த போலீசில் புகார் கொடுத்த உடன், கோபிநாத்தை கைது செய்தனர். மேலும் ஜெப்டோ நிறுவனத்திலும் அந்த பெண் புகார் செய்துள்ளார்.