உல்லாசத்தால் 24 வயது இளைஞர் பலி… மனைவி, குழந்தைகள் இருந்தும்…. மர்ம மரணம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2025, 9:45 am

கரூர் மாவட்டம், லாலாபேட்டையை அடுத்து புதுப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் மாயனூருக்கு கொத்தனார் வேலை செய்ய வரும்பொழுது, அந்த ஊரை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுடன் பழக்கமாகி இருவரும் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளனர்.

The life of a 24-year-old youth lost in a fit of lust

கடந்த 14ஆம் ஆம் தேதி வீட்டை விட்டு இரண்டு பேரும் வெளியே சென்ற நிலையில், மணிகண்டனின் தந்தை சரவணன் லாலாபேட்டை காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என்றும், இளம்பெண்ணை காணவில்லை என்று பெண்ணின் தம்பி மாயனூர் காவல் நிலையத்தில் புகார் மனு புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி இரவு 9 மணியளவில் மணிகண்டன் மற்றும் அந்த இளம் பெண்ணை மாயனூர் காவல் நிலையத்தில் வைத்து எச்சரித்து, மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால், இருவரையும் சேர்த்து வைக்க இயலாது என்று அறிவுரை கூறி அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாயனூர் வந்த மணிகண்டன் அப்பெண்ணின் வீட்டு அருகில் மாயனூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்பாதையில் அடிபட்டு, இரண்டு கால்களும் முட்டியின் கீழ் துண்டாகி தலையில் அடிபட்டு சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரயில்வே காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாவில் மர்மம் இருப்பதாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தான் மணிகண்டனை கொலை செய்துள்ளனர் என கூறி கரூர் – திருச்சி சாலையில் காந்திகிராமம் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லாததால் பொறுமை இழந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பு ஏற்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!