காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர்… மிளகாய் பொடி தூவி தூக்கிச் சென்ற அதிர்ச்சி வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan25 September 2025, 11:51 am
இன்றைய காலக்கட்டங்களில் காதல் திருமணங்கள் சாதாரணமாகிவிட்டன. சில திருமணங்கள் பெற்றோரை எதிர்த்து நடக்கும், மற்றவை பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெறும். ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாத சில பெற்றோர் காலப்போக்கில் சமரசம் செய்துகொள்வார்கள்.
ஆனால் சில பெற்றோர் கௌரவம்தான் முக்கியம் என்று கருதி கொலை செய்யவும் தயங்குவதில்லை. அதேபோன்ற ஒரு சம்பவம் கீசராவில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் கீசரா பகுதியில் நர்சம்பள்ளி கிராமத்தில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.
நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா என்பவர் பிரவீண் என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் தங்களுக்குப் பிடிக்காததால் ஸ்வேதாவின் பெற்றோர், பால நரசிம்மா மற்றும் மகேஸ்வரி ஆகியோர், மகள் மீது கோபம் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலையில், பிரவீண் வீட்டிற்குச் சென்று உறவினர்களின் உதவியுடன் ஸ்வேதாவைக் கடத்திச் சென்றனர். பிரவீண் மற்றும் ஸ்வேதா இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதிகாலையில் பிரவீண் வீட்டின் மீது ஸ்வேதாவின் பெற்றோர் தாக்குதல் நடத்தினர்.
ஸ்வேதாவின் கண்களில் மிளகாய்பொடியை தூவி, துணியால் கட்டித் தூக்கிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
கீசரா அருகே ஒரே கிராமத்தில் வசித்த பிரவீன், ஸ்வேதா இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், பிடிக்காத பெண் தரப்பினர் கணவர் வீட்டில் இருந்த மகளை மிளகாய் பொடி தூவி கடத்தி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது#Trending | #viralvideo | #marriage | #fighting | #updatenews360 pic.twitter.com/aHJJpvGTnc
— UpdateNews360Tamil (@updatenewstamil) September 25, 2025
இந்தச் சம்பவம் குறித்து கணவர் பிரவீண் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரவீண் அளித்த புகாரின் பேரில், ஸ்வேதாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சிசிடிவி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
