வறண்ட முடியை ஈடுகட்ட சிம்பிளான ஆயுர்வேத டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
16 April 2022, 10:46 am
Quick Share

வறண்ட, உதிர்ந்த முடி கோடையில் மிகவும் பொதுவான முடி பிரச்சினைகளில் ஒன்றாகும். எனினும், நீங்கள் அவற்றை சமாளிக்க விலையுயர்ந்த பொருட்கள் தேவையில்லை – ஒரு எளிய தீர்வு ஒன்று உள்ளது. அது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

வறண்ட, உதிர்ந்த முடியை வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டு “பளபளப்பான முடியாக” மாற்றலாம் – நெல்லிக்காய் பொடி மற்றும் ஆமணக்கு எண்ணெய்.

இதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:-
நெல்லிக்காய் தூள்
தண்ணீர்
10 மில்லி – ஆமணக்கு எண்ணெய்

முறை:
நெல்லிக்காய் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். அதில், உங்கள் முடியின் நீளத்தைப் பொறுத்து, 10 மில்லி ஆமணக்கு எண்ணெயைச் சேர்க்கவும்.

எப்படி பயன்படுத்துவது?
பேஸ்ட்டை உச்சந்தலையிலும் முடியிலும் தடவவும். 15-20 நிமிடங்கள் வைத்திருங்கள்.
சாதாரண தண்ணீர் கொண்டு கழுவவும்.

6-8 மணி நேரம் கழித்து அல்லது அடுத்த நாள் ஷாம்பு போடுங்கள். பேஸ்ட் முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.

உச்சந்தலையில் மற்றும் உடலில் ஏற்படும் அரிப்புகளை எதிர்கொள்ள:
* கொதிக்கும் நீரில் வேப்ப இலைகளை சேர்க்கவும். பின்னர் இந்த தண்ணீரை குளிக்கும் நீரில் சேர்க்கவும்.

* தினமும் 4-5 வேப்ப இலைகளை மென்று சாப்பிடுங்கள்.

கூடுதலாக அதிகப்படியான உப்பு மற்றும் புளிப்பு பொருட்களை கோடையின் உச்சத்தில் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

Views: - 761

0

0