“ப்ரியா பவானி ஷங்கருக்கு என்னுடைய உதவி தேவைப்படல” – ஓபனாக போட்டு உடைத்த அருள்நிதி !
31 January 2021, 8:24 am2017- ஆம் ஆண்டு ரீலீஸ் ஆன மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இவர் முதன் முதலில் புதிய தலைமுறை சேனலில் நியூஸ் Anchor ஆக இருந்து அதன் பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடித்து, அதன் பின்பே சினிமாவிற்கு வந்தார். மேயாத மான் படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது, இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்துல சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் ஒரு படம், சிம்புவுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், அவருக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் வாரம், ஜீவா, அருள்நிதி இவர்களுடன் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்த களத்துல சந்திப்போம் என்னும் படம் ரீலீஸ் ஆக உள்ளது.
இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அருள்நிதி சமீபத்தில் பேட்டி ஒன்றில் “நான் உயரமாக இருப்பதால் என்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு ஒரு ஆப்பிள் பாக்ஸை படப்பிடிப்பு தொடங்கும் முதல் நாள், நானே கொடுத்து விடுவேன்.
அதில் ஏறி நின்று தான் என்னுடன் நடிப்பார்கள். ஆனால், ப்ரியா பவானி ஷங்கர் இயல்பாகவே கொஞ்சம் உயரம் என்பதால் அவருக்கு ஆப்பில் பாக்ஸ் தேவைப்படவில்லை” என்று கூறியுள்ளார்.
0
0