அர்ணவ் “அப்படிப்பட்டவர்” பிளான் பண்ணி காதல் ஆசை காட்டி பல பெண்களை ஏமாத்திட்டாங்க.. ஆதாரத்தை வெளியிட்ட மனைவி திவ்யா..!

Author: Vignesh
11 October 2022, 11:15 am
divya-arnav_updatenews360
Quick Share

‘பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் பெங்களூருவைச் சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட ‘கேளடி கண்மணி’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதனிடையே, புதுக்கோட்டையைச் சேர்ந்த நைனா முகமத் என்பவர் அர்ணவ் என்ற பெயரில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருந்தார்.

கேளடி கண்மணி’ சீரியலை தொடர்ந்து நடிகை திவ்யா மற்றும் அர்ணவ் பிரபலமானார்கள். நடிகை திவ்யா மகராசி, செவ்வந்தி சீரியலிலும் நடித்துள்ளார். அர்ணவ் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வருகிறார்.

arnav - Divya_updatenews360

இருவரும் நட்பாக பழகி வந்தநிலையில், கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியதாகவும், ஒரே வீட்டிலும் வாழத் தொடங்கினர். 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்த இவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.

சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்தாண்டு ஜூன் மாதம் திவ்யா இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறி, இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனிடையே, கணவர் அர்ணவ் தன்னை தாக்கியதாக கூறி நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டார். மேலும், திவ்யா அளித்த புகார் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அர்ணவ் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

arnav - Divya_updatenews360

இதுகுறித்து பேட்டியளித்துள்ள அர்ணவ் கூறியதாவது:-

நடிகை திவ்யா கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்ணவ், நான் திவ்யாவை அடிக்கவில்லை அவர் தான் என்னை அடித்தார் என்று, ஆதாரமாக தனது செல்போனில் உள்ள போட்டோக்களை காண்பித்தார்.

பல முறை நடிகை திவ்யா தற்கொலை செய்து கொள்வேன் என கைகளை கத்தியால் கிழித்துக் கொண்டு தன்னை மிரட்டி உள்ளதாகவும், குழந்தை இருப்பது தெரியாது தனது அக்காவின் குழந்தை என்று திவ்யா கூறியதாகவும், திவ்யா விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறியிருந்த நிலையில், காதலித்தது 5 ஆண்டுகளாக சேர்ந்து இருந்தது எல்லாம் உண்மை தான். ஆனால், திருமணத்திற்காக விவாகரத்து பேப்பரை கேட்டபோது தான் இந்த ஜனவரியில் தான் விவாகரத்தாகி உள்ளதே தெரிந்தது.

arnav - Divya_updatenews360

மேலும் திவ்யாவுக்கு, தன் மீது வீண் சந்தேகம் என்றும், செல்லம்மா சீரியல் நடிகை முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னை சேர்த்து வைத்து பேசுகிறார், சந்தேகப்படுகிறார், தவறாக புரிந்து கொண்டு தினமும், அந்த நடிகையையும் என்னையும் அசிங்கமாக பேசி மனரீதியாக துன்புறுத்துகிறார்.

திவ்யாவின் தேவையில்லாத சந்தேகமே இந்த பிரச்சனைக்கு முழுக்காரணம் என்றும், எல்லா பிரச்சனையை தாண்டியும் எனக்கு திவ்யாவுடன் சேர்ந்து வாழவே ஆசை என அர்னவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டியளித்துள்ள திவ்யா கூறியதாவது:-

divya_updatenews360

அர்ணவுக்கு ஏற்கனவே பல பெண்களோடு தொடர்பு இருந்ததாகவும், அதுவும் ஒரு பெண் அர்ணவ் பணம் வாங்கி தன்னை ஏமாற்றி விட்டதாக போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இருப்பதாக நடிகை திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசியாவில் இருக்கும் ஒரு பெண்ணும் இவரும் காதலித்து பிரிந்த பிறகு அர்ணவ் பணம் கேட்டு அந்த பெண்ணை தொந்தரவு செய்ததாகவும் தற்போது அந்த பெண் திவ்யாவிடம் ஆதாரங்களை கொடுத்திருப்பதாகவும் திவ்யா பரபரப்பாக ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Views: - 833

0

0