பெருமாள் பிச்சையாக வில்லத்தனம் காட்டிய விக்ரம் பட நடிகரின் பரிதாப நிலை! காலம் எவ்வளவு கொடுமையானது…

Author: Prasad
12 June 2025, 11:12 am

பெருமாள் பிச்சை

விக்ரம் நடித்த “சாமி” திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து அசத்தியவர் கோட்டா சீனிவாச ராவ். இவர் தமிழில் “குத்து”, “திருப்பாச்சி”,  “பரமசிவன்” போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார். “ஆல் இன் ஆல் அழகுராஜா” திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நம்மை ரசிக்கவைத்தார்.

இவர் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் தெலுங்கு சினிமா உலகில் கொடிகட்டி பறந்த வில்லன் நடிகர் ஆவார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு இவர் பாஜக சார்பாக ஆந்திர மாநிலம் கிழக்கு விஜயவாடா தொகுதியில் போட்டியிட்டு வென்று ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

சமீப ஆண்டுகளாக கோட்டா சீனிவாச ராவ் எந்த திரைப்படங்களிலும் தலைகாட்டவில்லை. இந்த நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பந்தலா கணேஷ் கோட்டா சீனிவாசனை சந்தித்து அவருடன் படம்பிடித்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படம்தான் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன ஆனது அவருக்கு?

தயாரிப்பாளர் பந்தலா கணேஷ் வெளியிட்டிருந்த அப்புகைப்படத்தில் கோட்டா சீனிவாச ராவ் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். அவரது இடது காலில் காயத்திற்கான கட்டுப் போடப்பட்டுள்ளது. வலது காலில் காயங்கள் தென்படுகின்றன. அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

actor kota srinivasa rao latest shocking photo viral on social media

அவருக்கு தற்போது 82 வயது ஆகிறது. முதுமை காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!
  • Leave a Reply