நடுரோட்டில் அவருடன் படுக்க சொல்லி வற்புறுத்தினார்…. அஞ்சலிக்கு நடந்த கொடுமை!

Author: Shree
14 October 2023, 3:32 pm

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக ஒரு ரவுண்ட் அடித்து வெற்றி நடிகராக பெயரெடுத்தவர் நடிகர் ஜெய். இவர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மார்கெட் பிடித்தார். இப்படியே போயிருந்தால் சார் வாழ்க்கையில் முன்னேறியிருப்பார்.

ஆனால், வழிமாறி நடிகைகளின் வாசத்தை நுகர்ந்த இந்த நடிகர் அவருடன் நடித்த நடிகை அஞ்சலியை காதல் வலையில் வீழ்த்தி சில வருடம் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இப்படியே போனால் நம்ம வாழ்க்கை நாசமாகிடும் என எண்ணிய அந்த நடிகை அவரை பிரிந்து செல்ல உடனே நடிகர் ஜெய் வாணிபோஜனை தன் காதல் வலையில் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்படுகிறது. இது எத்தனை நாளைக்கோ? நடிகை வயிற்றில் குட்டி உருவாகாமல் இருந்தால் சரி தான் என ஏசுகிறார்கள் இணையவாசிகள்.

இதையெல்லாம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காத ஜெய்யை எப்படியாவது திருத்த வேண்டும் என சினிமா தொழிலை கூட தூக்கி எறிந்துவிட்டு கணவன் மனைவியாக குடும்பம் நடத்தலாம் பின்னர் சொல்பேச்சு கேட்பார் என நம்பிய அஞ்சலி செய் உடன் சேர்ந்து திருவான்மியூர் பீச்சில் ரெண்டு பிளாட் வாங்கி வாழ்ந்து வந்துள்ளார்கள்.

அப்படியிருந்தும் ஜெய் குடி பழக்கத்தை விடவே இல்லையாம். இதனால் கார் விபத்தில் கூட சிக்கி உயர் தப்பினார். இதையெல்லாம் பார்த்த அஞ்சலி இனிமேலும் இவருடன் வாழ்ந்தால் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என பயந்து அவரை உதறிவிட்டு தன் பங்கு வீட்டையும் விற்றுவிட்டு சென்றுவிட்டாராம். தற்போது ஜெய் அந்த பிளாட்டில் அவரது அப்பா உடன் இருக்கிறார்.

அஞ்சலியும் முன்பை விட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அங்காடி தெரு படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துக்கொண்டார். அதில் ஒரு காட்சியில் சாலையில் படுத்திருக்கும் நபருடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் என்னால் முடியாது என எவ்வளவோ சொல்லி பார்த்தேன். ஆனாலும் இயக்குனர் விடுவதாக இல்லை. கதைக்கு திருப்புமுனையாக இந்த காட்சி இருக்கும் என்றும் செட் அமைத்து செய்தால் தத்ரூபமாக இருக்காது என்று சொல்லி நடிக்க வைத்தார்கள். இயக்குனர் வற்புறித்தியதால் தான் அப்படி ஒரு காட்சியில் நடித்தேன் என அஞ்சலி கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!