“அதை ஏன் செய்தேன் என இருந்தது.” தீராத வலியால் அவதிப்பட்ட சமந்தா.. வீடியோ வைரல்..!

Author: Rajesh
19 April 2022, 2:53 pm
Quick Share

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது புஷ்பா படத்தில் இவர் ஆடிய Oo Solriya பாடல் பரபரப்பு அடங்குவதற்குள் அதை வைத்து காசாக்க, YouTube channel ஒன்றை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதில் பதில் அளித்துள்ளார். அதில் அவரது காது குத்திய இடம் எப்படி சரியானது என ஒரு ரசிகர் கேட்டிருந்தார்.


அதற்கு பதில் கூறிய சமந்தா ‘சரியாக ஆறு மாதங்கள் ஆனது. ஏன் செய்தேன் என இருந்தது, இது சரியாக நீண்ட காலம் ஆகும்’ என சமந்தா கூறி இருக்கிறார்.

மேலும் டாட்டூ பற்றி மற்றொருவரின் கேள்விக்கு ‘எப்போதும் டாட்டூ போடாதீங்க.. என்று தான் அட்வைஸ் கூறுவேன்’ என தெரிவித்து உள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 865

2

0