அந்த இடத்தை பெரிதாக்க சொல்லி கட்டாயப்படுத்திய இயக்குனர்.. பல ஆண்டு ரகசியத்தை உடைத்த சமீரா ரெட்டி..!

Author: Vignesh
14 September 2023, 10:15 am

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு இரண்டு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே பீல்டு அவுட் ஆகிவிட்டார். அதற்கு காரணமே முதல் குழந்தை பிறந்த பிறகுதான் அதிக உடல் எடை அதிகரித்ததாகவும், அதை பார்த்து பலரும் விமர்சித்ததாகவும், காய்கறி விற்பவர் கூட மோசமாக பேசியிருக்கிறார் என்றும், தன்னுடைய வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டேன். பத்திரிகையாளர்களை போட்டோ எடுக்க விடமாட்டேன். அந்த அளவுக்கு இந்த சமூகம் எனக்கு ஒரு மோசமான அனுபவத்தை கொடுத்தது என சமீரா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

sameera reddy-updatenews360

மேலும், ஒரு படத்தில் நடிக்க இயக்குனர் ஆடிஷன் செய்ததாகவும் அப்போது அவர் தன்னை பார்வையாலே படு மோசமாக பார்த்ததாகவும், தன்னுடைய மார்பை அழகாக பெரிதாக காட்ட அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாக கூறினார். மேலும் அதன் பின் மார்பகத்தை பெரிதாக்க முயற்சி எடுத்ததாகவும், அதை செய்யாமல் இருந்திருக்கலாம் என்று தற்போது நினைத்து வருவதாகவும் சமீரா ரெட்டி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?