தனுஷின் தந்தைக்கு போங்கு காட்டி வரும் ஆதிக் ரவிச்சந்திரன்? என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?

Author: Prasad
2 June 2025, 5:52 pm

ஃபோனையே எடுக்கமாட்டிக்கிறார்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது. எனினும் இத்திரைப்படத்தின் மீது அதிக விமர்சனங்களும் வந்தன. அதாவது இத்திரைப்படம்  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அஜித் ரசிகர்களோ, “இது அஜித் ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட திரைப்படம்” என்று இத்திரைப்படத்தை கொண்டாடினார்கள். 

இத்திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.  இந்த நிலையில் இப்பாடல்களை தனது அனுமதி இல்லாமல் இத்திரைப்படத்தில் பயன்படுத்தியதாக இளையராஜா தரப்பில் இருந்து ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா, “எனது படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபா தாரேன் என்ற பாடலை குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். குறைந்தபட்சம் என்னிடம் அனுமதியாவது கேட்டிருக்கலாம். எனக்கு ஒரு மரியாதையாவது கொடுத்திருக்கலாம். குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒத்த ரூபா பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்து ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேச பல முறை முயற்சி செய்தேன். ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை” என கூறியிருந்தார்.

adhik ravichandran avoid kasthuri raja calls

“ஒத்த ரூபா தாரேன்” என்ற பாடல் கஸ்தூரி ராஜா இயக்கிய “நாட்டுப்புறப்பாட்டு” என்ற படத்தில் இடம்பெற்றிருந்தது. இப்பாடலை கஸ்தூரி ராஜாவே எழுதியிருந்தார். இதனை தொடர்ந்துதான் தனது அனுமதி இல்லாமல் இப்பாடலை பயன்படுத்தியதாக கஸ்தூரி ராஜா ஆதிக் ரவிச்சந்திரனை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரனிடம் பேச அவருக்கு பல முறை ஃபோன் செய்தும் அவர் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

என்ன காரணம்?

adhik ravichandran avoid kasthuri raja calls

இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் கஸ்தூரி ராஜாவின் ஃபோனிற்கு ஏன் பதிலளிக்கவில்லை என்பது குறித்தான காரணம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் இயக்க உள்ளாராம். அதற்கான டிஸ்கஷன் பணிகளில் அவர்கள் இருக்கிறாராம். ஆதலால் யார் தொடர்புகொண்டாலும் அவரை பிடிப்பது கஷ்டமாம். இதன் காரணமாகத்தான் அவர் யார் ஃபோனையும் எடுப்பதில்லை என பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார். 

  • karnataka film chamber wants to release thug life movie நீதிமன்றம் கிடக்குது, நீங்க வாங்க கமல் சார்- தக் லைஃப் படத்தை வெளியிட ஆர்வம் காட்டும் கர்நாடகா பிலிம் சேம்பர்!
  • Leave a Reply