அது தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறீங்க… கடுப்பான ஆலியாபட்..!

Author: Rajesh
2 March 2022, 9:07 pm

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர். இந்த நிலையில் சமீபத்தில் அவரது நடிப்பில் கங்குபாய் எனும் படத்தில் நடித்திருந்தார்.மேலும், இப்படம் இதுவரை ரூ. 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஆலியா பட்-டிடம் உங்களுக்கும் ரன்பீர் கபூருக்கும் எப்போது திருமணம் என்ற கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை ஆலியா பட் ‘பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்களை காப்பாற்றுவது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு எப்போது திருமணம் என்பதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள தேவையில்லை’. மேலும் ‘நான் யாருடன் மதிய உணவு சாப்பிடுகிறேன் என்பதை யாரிடமும் சொல்ல வேண்டியதில்லை. இதைவிட உங்களுக்கு முக்கியமான வேலைகள் இருக்கிறது. அதை பாருங்கள்’ என்று கடுப்பாக பேசியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!