என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாத.. சாய் பல்லவியிடம் வழிந்த சிவகார்த்திகேயன்..!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2024, 11:46 am

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜக்குமா பெரியசாமி இயக்கியுள்ள படம் தான் அமரன். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீசாகிறது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்மாக நடந்தது.விழாவில் இயக்குநர் மணிரத்னம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Amaran audio launch

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், பிரேமம் திரைப்படத்தை பார்த்து சாய் பல்லவிக்கு போன் செய்து பேசியது நினைவுப்படுத்தினார். அவருக்கு கால் செய்து மலர் கதாபாத்திரத்தில் நல்லா நடிச்சிருக்கீங்க என சொன்னேன்.

Sivakarthkeyan amaran audio launch speech

உடனே அவர் தேங்யூ அண்ணா என கூறினார். நான் உடனே அண்ணா எல்லாம் கூப்பிடடாத, அந்த படத்துல வர மாதிரி என்ன மறந்து கூட போயிடுனு சொன்னேன். பியூட்டர்ல ரெண்டு பேரும் ஜோடியா நடிக்கலாம்னு ஒரு பிட்டு போடேன்.

இதையும் படியுங்க: ஜெயம் ரவிக்கு இரண்டாவது திருமணம்? மும்பையில் தடல்புடல் ஏற்பாடு.. பிரபலம் சொன்னது உண்மையா?!

அப்போ சொன்னது இப்ப நினைவாயிடுச்சு, சாய் பல்லவி தனக்கான ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வெச்சிருக்காங்க. சாய் பல்லவினாலே ஒரு பிராண்ட் என சிவகார்த்திகேயன் பாராட்ட, சாய் பல்லவி வெட்கம் தாளாமல் கன்னம் சிவக்க சிரித்தார்.

manirathnam amaran

இதையெல்லாம் விழாவில் அமர்ந்திருந்த சிவகார்த்திகயேன் மனைவி ஆர்த்தி, வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என்பது போல பார்த்தார்.

  • remorse between simbu and santhanam is the main reason for drop of str 49 சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?