பறிப்போன வாய்ப்பு.. வேற ரூட்டுக்கு தாவிய அஞ்சலி – இனி அவங்க காட்டுல மழைதான்..!

Author: Vignesh
27 February 2024, 1:16 pm

2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகை அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

anjali-updatenews360

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது, மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் வெப் சீரிஸ்லும், நடித்தார். தற்போது, அஞ்சலி தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இடையில் நடிகர் ஜெயுடன் லிவிங் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், அந்தக் காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. மேலும், தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தற்போது, சினிமாவில் கவனம் செலுத்துவரும் அஞ்சலி இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பறிபோன பட வாய்ப்புகளை மீட்டெடுக்க கவர்ச்சி ரூட்டுக்கு தாவியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இனிமே அஞ்சலி காட்டில் மழை தான் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!