உடைந்து போன ஏ.ஆர்.ரஹ்மான்….கண்ணீருடன் பதிவு..!

Author: Selvan
20 November 2024, 10:02 am

இந்திய சினிமாவின் உச்சத்தில் வலம் வருபவர் ஏ.ஆர். ரகுமான்.இதுவரை
எந்த ஒரு கிசு கிசுக்கும் இடம் கொடுக்காமல் தன்னுடைய சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு சுமுகமான பயணத்தில் இருந்து வந்தார்.

AR Rahman 30th Anniversary Dreams Shattered

இந்நிலையில் அவருடைய மனைவியான சாய்ரா பானு நங்கள் இருவரும் பிரிவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதனை பார்த்து ஏ ஆர் ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில் நொறுங்கிய இதயத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரஹ்மானை பிரிகிறேன்..சாய்ரா பானு அறிக்கை : அதிர்ச்சியில் திரையுலகம்….!

அதில் நங்கள் 30வது திருமண நாளை எட்டிப்பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் அதனை காண முடியாத நிகழ்வாக மாறியுள்ளது . நொறுங்கிய இதயத்தின் எடையை சுமக்க கடவுளின் சிம்மாசனம் தாங்கும்போது கூட அது நடுங்கலாம். பிரிவுக்கான அர்த்தத்தை கண்டறிந்து உடைந்த இதய துண்டுகளை ஒட்டவைக்க நினைத்தபோது அது முடியவில்லை .

AR Rahman’s Emotional tweet

இந்த மோசமான சூழ்நிலையை நாங்கள் கடந்து செல்லும்போது எங்கள் மீது அன்பு காட்டி,தனியுரிமையை மதிக்கும் நண்பர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…