கன்னடத்து பைங்கிளியா நடிக்க சொன்னா கற்புக்கரசியா காட்டிக்கறாங்க : பிக்பாஸ் போட்டியாளரை படுகேவலமாக விமர்சித்த பயில்வான்..!

Author: Vignesh
13 December 2022, 4:36 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

rachitha_mahalakshmi-Updatenews360

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.தற்போது இது சொல்லமறந்த கதை சீரியலில் நடித்து வந்த இவர், அந்த சீரியல் பாதியில் கை விடபட்டது.

Rachitha-Mahalakshmi-updatenews360-4

இதனையடுத்து, கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 6. கடந்த வாரம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ராம் மற்றும் ஆயிஷா பிக்பாஸ் வீட்டினைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்தவாரமும் யார் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று நெட்டிசன்கள் யூகித்து வருகிறார்கள். அந்தவகையில், சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி பயில்வான் விமர்சித்து பேசியுள்ள வீடியோ வைரலானது.

அதில், ரச்சிதா மகாலட்சுமியை தன்னை விமர்சித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. ராஜாங்கம் எபிசோட்டில் கேரக்டாராக மாறியது அமுதவானன், ரச்சிதா, மைனா நந்தினி, ராம் போன்றவர்கள் நன்றாக செய்தார்கள்.

actress-rachitha-mahalakshmi-updatenews360

ஆனால் ரச்சிதா சரோஜா தேவியாக சிறப்பாக செய்தார்கள். அதில் ஆண்களை மேடையில் ஏற்றாமல் தன்னை கற்புக்கரசியாக காட்டிக்கொள்கிறார்கள்.

சீரியலில் மட்டும் தான் ஹீரோக்களுடன் நெருக்கமாக காட்டுவேன் என்று நினைத்து இங்கே ஆண்களை நெருங்கவிடாமல் தடுத்து வருகிறார் என்று பயில்வான் விமர்சித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!