ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து ப***.. முகம் சுழிக்கும் கேள்வியால் கடுப்பான நெட்டிசன்கள்..!

Author: Vignesh
6 October 2023, 12:04 pm
bigg boss 7 tamil-updatenews360
Quick Share

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg boss 7

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இதனிடையே, சீசன் 7 ஆரம்பமானது முதல் பிரதீப் அதிகம் மக்களால் பேசப்படுகிறார். ஒரே படுக்கையில் ஆண் பெண் படுப்பதை பற்றியும் விசித்ரா உங்களுடன் படுப்பது பற்றியும் கேவலமாக பிரதீப் பேசியிருக்கிறார். இதற்கு விசித்ரா, நீ வந்து படு, நீ வாடா ஒரேடியா தூங்க வெச்சிடுறேன் என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஒரு பேச்சு வார்த்தையின்போது, ரவீனாவை பார்த்து நாம் இருவரும் சேர்ந்து படுக்கலாமா என கேட்கிறார். இதை கேட்பவர்களுக்கு கொஞ்சம் முகம் சுளிக்கும் பேச்சாகவே இருக்கிறது. ரசிகர்களும் அவரை தற்போது திட்டி தீர்த்து வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Views: - 349

0

0