நண்பன் என்ற ஒரே காரணத்திற்காக அத்துமீறிய சிவகார்த்திகேயன்? படம் டிராப் ஆனது இதுக்காகத்தானா?
Author: Prasad4 June 2025, 7:52 pm
100 கோடி வசூல் செய்த படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் ஆனது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வெளிவந்தது.
அத்திரைப்படத்திற்கான டிஸ்கஷனும் தொடங்கின. ஆனால் என்ன காரணத்தினாலோ அத்திரைப்படம் தொடங்கப்படவில்லை. இதனை அடுத்து சிபி சக்கரவர்த்தி தெலுங்கில் நானியை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக கூறப்பட்டது.
டிராப் ஆனதற்கான காரணம்
இந்த நிலையில் சமீபத்தில் தனது வலைப்பேச்சு வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து இயக்க இருந்த திரைப்படம் டிராப் ஆனதற்கான காரணத்தை குறித்து ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது சிபி சக்கரவர்த்தி எழுதிய கதையில் சிவகார்த்திகேயனின் தலையீடு அதிகமாக இருந்ததாம். தனது நண்பன் என்ற காரணத்தினால் கொஞ்சம் ஓவராக உரிமை எடுத்துக்கொண்டாராம். இதன் காரணமாகத்தான் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயன் பிராஜெக்ட்டில் இருந்து விலகியதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தற்போது “மதராஸி”, “பராசக்தி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.