மகன்களுக்காக எடுத்த திடீர் முடிவு… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் : பிரபலம் ஓபன்!!
Author: Udayachandran RadhaKrishnan7 June 2025, 2:35 pm
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் தனுஷ் மற்றும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதையும் படியுங்க: மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!
இவர்கள் விவாகரத்து வழக்கு நீண்டு கொண்டே வந்ததால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என நினைத்திருந்த நிலையில், இவர்கள் விவாகரத்தை உறுதி செய்தது நீதிமன்றம்.
இதனால் ரஜினி மனக்கவலையில் இருந்தார். விவாகரத்து செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இருவரும் பிரிந்தாலும், இரு மகன்களாக யாத்ரா, லிங்கா கோ பேரண்ட் என்ற முறையில் வளர்த்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் சர்வதேச பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த தனுஷ் மூத்த மகன் யாத்ராவுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டு மகன் யாத்ராவை முத்த மழை பொழிந்து வாழ்த்தினர். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதற்கு ரசிகர்கள், நெட்டிசன்கள் வாழ்த்துக்களை குவித்தனர். ஒரு பக்கம் ரஜினிக்கு இது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை தனியார் யூடியூப் சேனுக்கு பகிர்ந்துள்ளார்.

அதில், தனுஷ், ஐஸ்வர்யா விவாகரது பெற்றாலும் கண்ணியத்துடன நடந்து கொண்டார்கள். மகன் யாத்ரா பட்டம் பெறுவதை காண வந்த இருவரும் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.
மகனுக்காக பிடிவாதம், ஈகோவை தளர்த்திய அவர்கள் அங்கு வந்தது, ரஜினிக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பு இருவரையும் இணைய வைத்துள்ளதாக கூறிய பயில்வான், விரைவில் போயஸ் கார்டன் பங்களாவில் மகன்களுக்கு சேர்ந்த வாழ முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
