மகனின் வாழ்க்கையில் விளையாடிய பாலா… கடுங்கோபத்தில் பளார் விட்ட விக்ரம்?

Author: Shree
22 June 2023, 2:11 pm

தமிழ் சினிமாவின் விசித்திர இயக்குனர் பாலா 1999ம் ஆண்டு விக்ரமை வைத்து சேது என்ற படத்தை இயக்கி முதன் முதலாக இயக்கினராக அவதாரம் எடுக்கிறார். விக்ரமும் சினிமாவில் ஜெயிக்க போராடிக்கொண்டிருந்த நேரம் அது. அப்போது படத்தை வெளியிடுவதில் பணரீதியாக பல பிரச்சனை வந்துள்ளது.

விக்ரம் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் கடனாக பணம் வாங்கி அந்த படத்தை எப்படியாவது வெளியிடவேண்டும் என போராடி ஒரு வழியாக படத்தை வெளியிடுகிறார். முதல் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் படம் ஓஹோன்னு ஓடி அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் ஆகிறது. நல்ல அடையாளத்தோடு வசூல் கொடுத்து. அன்றிரலிருந்து பாலா – விக்ரம் நட்பு கூட்டணி தொடர்ந்த்து.

தன்னை ஒரு சிறந்த நடிகனாக பாலா எப்படி கண்டெடுத்தாரோ அப்படியே தன் மகனுக்கும் ஒரு சிறந்த படத்தின் மூலம் அறிமுகம் செய்துவையுங்கள் என கூறி கொண்டுசென்று விடுகிறார். தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படம் மிகச்சரியாக இருக்கும் என கூறி மகனை நடிக வைக்கிறார். ஆனால், பாலா படத்தை ஒழுக்காக எடுக்கமால், முழுக்க முழுக்க ஆபாச காட்சிகளை கொண்டே எடுக்கிறார். ஒரு கட்டத்தில் படத்தை பார்த்து செம கடுப்பான விக்ரம் பாதியிலே எழுந்து வர தன்னை அசிங்கப்படுகிறயா? நான் எப்பேற்பட்ட இயக்குனர் தெரியுமா? எனக்காக எத்தனை டாப் ஹீரோக்கள் வரிசைகட்டி நிற்கிறார்கள் தெரியமா? என மல்லுக்கட்டியுள்ளார்.

அவருக்கு ஒன்றுமே பதில் சொல்லமால் கார் எடுத்துக்கொண்டு கிளம்பிய விக்ரம் வர்மா படத்திற்கு எவ்வளவு செலவு ஆகியோருந்தாலும் பரவில்லை அதை நான் சரிசெய்துகொள்கிறேன் நீங்க வேறு இயக்குனரை வச்சி அதே படத்தை நல்லா எடுங்க என தயாரிப்பாளரிடம் சொல்ல பாலாவை கழட்டிவிட்டு இயக்குனர் கிரீசாய வைத்து ஆதித்ய வர்மா படத்தை எடுத்து வெளியிட்டார்கள். அது துருவ் விக்ரமுக்கு எதிர்பார்த்தது போலவே நல்ல அறிமுகத்தை கொடுத்தது. பாலா இயக்கிய வர்மா படம் வெளியாகியிருந்தால் துருவ் விக்ரமின் முதலும் முடிவுமாக அது அமைந்திருக்கும் என கூறுகிறார் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…