‘நீ வேற யாரையாவது வைத்து படத்தை எடுத்துக்கோ..’ ஷூட்டிங்கில் சிம்பு செயலால் கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார்…

Author: Rajesh
26 March 2023, 12:15 pm
Quick Share

தமிழ் சினிமாவில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தையும் ஒரே திரைக்கதையில் அமைத்து மக்கள் ரசிக்கும் படி படங்களை இயக்கி முன்னணியாக இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிம்புவுடன் பணியாற்றியபோது நடந்த ஒரு கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 2006ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “சரவணா”.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டு நாட்கள், சிம்பு காலை 7 மணி படப்பிடிப்பிற்கு 11 மணிக்கு வந்தாராம். மூன்றாவது நாள் சிம்புவை அழைத்த ரவிக்குமார், “தயாரிப்பாளரிடம் கூறி நான் இந்த படத்தில் இருந்து விலகிவிடுகிறேன். நீ வேற இயக்குனரை வைத்து படத்தை எடுத்துக்கொள்” என கூறியிருக்கிறார். இதைக்கேட்டு ஷாக்கான சிம்பு, “சார் ஏன் சார் இப்படி சொல்றீங்க?” என கேட்க, “நான் 7 மணியில் இருந்து உனக்காக ஷாட் வச்சிட்டு காத்துட்டு இருக்கேன்.

simbu - updatenews360

ஆனா நீ 11 மணிக்கு வர. நீ 11 மணிக்குத்தான் வருவீனா முன்னாடியே சொல்லிரு. நான் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்கிறேன். இந்த படத்தை நான் சீக்கிரம் முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என கூறினாராம். அதன் பிறகு சிம்பு, அடுத்த நாளில் இருந்து படப்பிடிப்பிற்கு வரும் நேரத்தை ரவிக்குமாரிடம் கூறிவிடுவாராம்.

அதற்கேற்ப கே.எஸ்.ரவிக்குமார் திட்டமிட்டுக்கொள்வாராம். கே.எஸ்.ரவிக்குமார் அஜித்தை வைத்து இயக்கிய “வரலாறு” திரைப்பட ஷூட்டிங்கின் பாதியில் ஒரு சிக்கல் ஏற்பட, அந்த இடைவெளியில்தான் “சரவணா” படத்தை இயக்கியிருக்கிறார். இதனால், இத்திரைப்படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.

Views: - 342

3

3