சூர்யாவை வெறுப்பேத்த விக்ரம் செய்த செயல்.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்..!

Author: Vignesh
30 December 2023, 11:12 am
Quick Share

பாலா தமிழ் சினிமாவில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றது. அதில், முக்கிய படம் என்னவென்றால் பிதாமகன் என்று சொல்லலாம். 2003 ஆம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு என பல நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

pithamagan

காமெடி எமோஷனல் காதல் என அனைத்திலும் கலந்த கலவையாகவே பிதாமன் படம் அமைந்திருந்தது. இந்த படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய கேரியரை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த படத்தில் சித்தன் கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி விக்ரம் நடித்திருப்பார்.

இப்படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் சூர்யாவின் சில காட்சிகளை இப்படத்தில் இருந்து கட் செய்யுமாறு பாலாவிடம் கேட்டிருக்கிறார். இந்த விஷயம் சூர்யாவின் காதுகளுக்கு சென்ற பிறகு அவர் விக்ரமிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். அதே சமயம் சூர்யாவை வெறுப்பேற்றுவதற்கு ஜோதிகாவை தனது படங்களில் விக்ரம் நடிக்க வைத்தது ஆக சொல்லப்படுகிறது.

surya vikram

இதனால்தான், விக்ரம் சூர்யா இடையே மனக்கசப்பு உருவாகிவிட்டதாம். இந்த ஒரே காரணத்தால் தான் சூர்யா ஜோதிகாவின் திருமணத்திற்கு விக்ரமுக்கு அழைப்பிதழ் கூட கொடுக்கப்படவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 246

0

0