அசிங்கமா இருந்தா உனக்கென்ன.. வேலையை மட்டும் பாரு : பிரபல பாடகியை கடிந்து கொண்ட இசைஞானி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2023, 1:04 pm

இசைஞானியின் இசைக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது. அவருடைய இசையை கேட்டுதான் பலரும் தங்களது சோகங்களை மறந்து வருகின்றனர்.

ஆனால் இளையராஜா அதிகாரத் திமிர் உள்ளவர், யாருக்கும் பிடி கொடுக்கமாட்டார், கோபக்காரர் என பலரும் சொல்வதுண்டு. ஏன் சில மேடை நிகழ்ச்சிகளில் கண்கூடாக பார்த்தது உண்டு.

அப்படித்தான் பிரபல பாடகி சித்ராவை இளையராஜா கடுமையாக திட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் குறித்த தற்போத தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே பாடி இருக்கிறார். தற்போது சித்ரா அவர்கள் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியில் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலையும் சித்ரா பாடியிருக்கிறார்.

இப்படி இவர் இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் வி உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் படங்களை பாடியிருக்கிறார். பல இசையமைப்பாளர் தேவா இசையில் பாட முடியாது என்று சித்ரா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, சமீபத்தில் சித்ரா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஆரம்பத்தில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக இளையராஜா என்பதற்காக பல ஐடியாக்களை கொடுத்தார்கள்.

நான் பாடும்போது ஒரு தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் பாட வாய்ப்பு வந்தது. அந்த இசையில் முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆனால், நான் அப்படி சொல்ல முடியாது. என்ன செய்வதென்று யோசித்தேன். ஆனால், தேவா சார் அமைதியானவர். அதனால் அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் சென்று தர முடியுமா சார்? ரொம்ப வல்கராவாக இருக்கிறது என்று சொன்னேன். அவரும் சரிமா மாற்றி தர நான் முயற்சி செய்கிறேன். இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம் இன்னொரு நாள் நான் சொல்றேன்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!