என் கருவை கலைச்சிருக்கார்-ஜாய் கிரிஸில்டாவை இவ்வளவு துன்புறுத்தினாரா மாதம்பட்டியார்? 

Author: Prasad
29 August 2025, 3:39 pm

இரண்டாவது திருமணம்

பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. 

மாதம்பட்டி ரங்கராஜுடன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா, தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்தது. 

Joy Crizildaa complaint that madhampatty rangaraj attacked her 

மாதம்பட்டி ரங்கராஜ்ஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளன. இந்த நிலையில் அவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெறாமல் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். 

என்னை அடித்து துன்புறுத்தினார்…

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாகவும்  தன்னுடன் அவர் வாழ மறுப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள்தான் எனது குழந்தைக்கு அப்பா. அவர் எனது குழந்தைக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இருவரும் ஒன்றாகத்தான் வாழ்ந்து வருகிறோம். 

அவர் தனது முதல் மனைவியுடன் சட்ட ரீதியாக பிரிந்து இருக்கிறேன் என கூறினார். அதனை நம்பித்தான் நான் அவரை திருமணம் செய்துகொண்டேன். கடந்த ஒன்றரை மாதங்களாக அவரை தொடர்புகொள்ளவோ அல்லது சந்திக்கவோ முடியவில்லை. 

Joy Crizildaa complaint that madhampatty rangaraj attacked her 

கடைசியாக அவரை ஒரு வாரத்திற்கு முன்பு பார்த்தேன். ஆனால் அவர் பேச தயாராக இல்லை. நான் பேச முயற்சி செய்தபோது அவர் என்னை அடித்துவிட்டார். எல்லோர் முன்னிலையிலும் என்னை தாக்கினார்” என கூறினார். 

அப்போது குறுக்கிட்ட ஒரு பத்திரிக்கையாளர், “குழந்தையை கலைச்சிருக்காங்களா?” என கேட்டதற்கு “அதெல்லாம் நடந்திருக்கிறது” என கூறி தனது பேட்டியை முடித்துக்கொண்டார். ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!