செட்டாப் பாக்ஸில் கேமரா வச்சி செட் பண்ண பார்த்தான்… படுக்கையறையில் நடிகையிடம் அத்துமீறல்!

Author: Shree
25 August 2023, 6:06 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.

இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். இந்நிலையில் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை க்ரித்தி கர்பந்தா தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இவர் தமிழில் கடந்த 2017ல் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ப்ரூஸ்லி படத்தின் மூலம் கோலிவுட்டில் நடித்து அறிமுகமாகினார்.

அந்த படம் பெரிய அளவில் ஸ்கோப் கொடுக்கவில்லை. இதனால் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். பாலியல் சீண்டல்கள் குறித்து அவர் பேசியதாவது, ” நான் கன்னட படமொன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது என்னுடன் வேலை செய்த ஒரு நபர் நான் தங்கிய அறையின் செட்டாப் பாக்ஸில் கேமரா வச்சி செட் பண்ணியிருந்தான்.

நான் எங்கு சென்றாலும் அந்த அறைகளை நன்கு சோதனை செய்வேன். அப்படி நான் நோட்டமிடத்தில் அந்த கேமரா என் கண்ணில் சிக்கியது. ஒருமுறை கூட நின்னு செல்பி எடுத்துகிறேன் சொல்லிட்டு ஒருத்தன் கிள்ளிட்டு ஓடிட்டான். ஒருத்தன் பைக்கிலே சென்றுக்கொண்டே என் பின்னால் தட்டிட்டு போய்ட்டான் என அடுக்கடுக்கான பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?