குழந்தைகளின் முகத்தை முதன்முறையா காட்டிய நயன்தாரா- தாறுமாறா குவியும் லைக்ஸ்!

Author: Shree
31 August 2023, 1:13 pm
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது முதன்முறையாக தனது மகன்களின் முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார். இரட்டை குழந்தைகளுக்கு கூலிங் க்ளாஸ் போட்டு மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ” நான் வந்துட்டேனு சொல்லு” என கேப்ஷன் கொடுத்து” அலப்பறை கெளப்பியுள்ளார். நயன்தாராவின் மகன்களை முதன்முறையாக பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்டு கமெண்ட்ஸ் குவித்துள்ளனர்.

Views: - 217

0

0