யார் இந்த பெண்? என்ன குரல் இது எலி குஞ்சு மாதிரி…. TVK மாநாட்டின் சொதப்பல்!

Author:
28 October 2024, 11:33 am

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் விக்கிரவாண்டி வி. சாலையில் நேற்று நடைபெற்றது. இலட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் விஜய் தங்களது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் செயல் திட்டங்களையும் தெரிவித்தார்.

விஜய்யின் இந்த தெளிவான அரசியல் பேச்சும் அவரது அரசியல் பயணமும் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டியிருப்பதாக பரவலாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் விஜய் அவர்களின் கொள்கையும் அவரது அரசியல் பயணத்துக்கான நோக்கமும் நல்ல புரிதலும் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது .

விஜய்யின் பேச்சு ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தாலும் கூட இந்த மாநாட்டை தொகுத்து வழங்கிய பெண்ணின் குரல் பலருக்கும் பிடிக்கவில்லை. பலரும் அந்த பெண்ணின் குரல் மாநாட்டை கெடுத்து விட்டதாகவும் வேற நபரே கிடைக்கவில்லையா?

ஒரு நல்ல குரல் வளம் மிக்க நபரை யாரேனும் தேர்ந்தெடுத்து இருக்க கூடாதா? என விமர்சனம் செய்து வருகிறார்கள். இது என்ன கட்ட குரல் இதைக் கேட்கவே கடுப்பா இருக்குது… தயவு செய்து அந்த பெண்ணை கத்த வேண்டாம் என சொல்லுங்கள் என அந்த மாநாட்டை Host செய்த பெண்ணை படு பயங்கரமாக விமர்சித்து ட்ரோல் செய்த வருகிறார்கள்.

தற்போது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண் யார் என்பது குறித்து பலரும் தேடி வெறிகொண்டு தேடி வந்த நிலையில் அவரைக் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விருதுநகர் விருதுநகர் மாவட்டம் காரியபட்டியை சேர்ந்த துர்கா தேவி.

இவர் ஆரம்பத்திலிருந்து விஜய் குறித்து பல கவிதைகளை எழுதி வந்த நிலையில் அவருக்கு தமிழக வெற்றி கழகம் கட்சியில் பேச்சாளராக சேர்ந்தார். விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்து வந்த துர்கா தேவியின் கவிதைகளை பார்த்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தது தாவெக காட்சி. ஆனால் அவரது குரல் வளம் சரியில்லை. அவரைவிட நல்ல குரல் வளம் மிக்க ஆளை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்பதுதான் மக்களின் பரவலான கருத்தாக தற்போது இருந்து வருகிறது.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!