குரங்குடன் ரொமான்ஸ் செய்த சமந்தா… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Author: Shree
27 July 2023, 3:40 pm

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் அவர் படங்களில் நடித்து வந்ததால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியாமல் தொடர் தோல்விகளை சந்தித்து மார்க்கெட் இழந்தார்.

இதனால் உடல் நிலையில் முழு அக்கறை செலுத்தி சிகிச்சை பெற்று பரிபூரணமாக குணமடைந்த பின்னர் மீண்டும் சினிமாவிற்கு வருகிறேன் என கூறி ஒரு வருடம் இடைவெளி விடுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். எனவே கையில் இருக்கும் ப்ராஜெக்ட்களை முடித்த பிறகு சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க இருக்கிறார். மேலும் ஏற்கனவே வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் சில தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்துவிட்டார். சமந்தாவின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது.

இதையடுத்து சமந்தா கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக ட்ரிப் அடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்தோனேசியாவிற்கு ட்ரிப் நடித்துள்ள சமந்தா அங்குள்ள Monkey Forestல் குரங்குடன் ரொமான்ஸ் செய்து எடுத்து எடுத்துக்கொண்ட செல்பி போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!