அவர் கொடுத்த கிஃப்ட்.. அதுபோதும்.. நாக சைதன்யா குறித்து வாய்த்திறந்த நடிகை சமந்தா..!

Author: Vignesh
11 July 2024, 11:28 am

அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

முன்னதாக உச்சத்தில் இருந்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து பிரிந்தது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், விவாகரத்திற்கு பின்னர் மயோசிடிஸ் நோய் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வர பல சிகிச்சை முறைகளை பயன்படுத்தி வரும் சமந்தா சமீபத்தில், கூட சர்ச்சையான சிகிச்சையை பரிந்துரைத்து விமர்சனங்கள் எழுந்தது. அதற்கான விளக்கத்தை சமந்தா கொடுத்த நிலையில், அந்த மருத்துவர் சமந்தா விடம் மன்னிப்பு கோரியும் இருந்தார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் எனக்கு பிடித்த பொன் மொழியை நாக சைதன்யா அவர் கையால் எழுதி கையாலே வரைந்த ஒரு பையை பரிசாக கொடுத்தார். அது என்னை மிகவும் கவர்ந்தது என்று நாக சைதன்யா குறித்து சமந்தா பேசி உள்ளார்.

  • adhik ravichandran salary details leaked for next film with ajith kumar அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!