கண்டதை எல்லாம் வைரல் ஆக்குறதை விட இதை ஆக்குங்க.. ரசிகர்களுக்கு ரக்ஷிதா வேண்டுகோள்..!

Author: Vignesh
26 January 2024, 12:30 pm
Rachitha-updatenews360-1
Quick Share

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Rachitha-updatenews360-1

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே, ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் ரக்ஷிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார்.

Rachitha-updatenews360-1

அதேபோல் உப்பு கருவாடு, மெய் நிகரே, ஃபயர் போன்ற தமிழ் படங்களிலும் சில கன்னடப் படங்களிலும் ரக்ஷிதா நடித்துள்ளார். இதற்கிடையில், ரக்ஷிதா, தினேஷ் விவாகரத்து பிரச்சனையும் ஒரு பக்கம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரக்ஷிதா மகாலட்சுமி கையில் துப்பாக்கியுடன் காவல்துறை கெட்டபில் ஆவேசமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு அடுத்த தமிழ் பாடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியாக இருப்பதாக ரக்ஷிதா அறிவித்துள்ளார். அதோடு, கண்டதை எல்லாம் வைரல் ஆக்குவதைவிட இதை ஆக்குங்க என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 272

0

0