நான் இறக்கப்போகிறேன்… என் சாவு இப்படி இருக்கும் – ஷாருக்கான் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Author:
19 October 2024, 10:56 am

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான ஷாருக்கான் தற்போது அங்கு தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

shah rukh khan superstar

அதை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ரூ.250 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் நடிகர் ஷாருக்கான்.

இவ்வளவு சம்பளம் வாங்குவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் வகையில் தான் படும் கஷ்டங்களையும் தனது உழைப்பையும் பற்றி முந்தா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்

இந்த நிலையில் தற்போது ஸ்விட்ச்லாந்தில் நடைபெற்ற 77வது லோக்கார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருது பெற்றுக் கொண்ட அவர். பேசிய பேச்சு தான் தற்போது ரசிகர்களை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

shahrukh khan speech about death

அதாவது நான் நான் சாகும் நாள் வரை நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. படப்பிடிப்பு தளத்திலேயே என்னுடைய உயிர் போக வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. ஒருவர் ஆக்சன் எனக் கூற நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே இறக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: போடி சொம்பு தூக்கி…. போற போக்கு பார்த்த கள்ளகாதல் ஜோடியை பிரித்து தான் அனுப்புவாங்க போல!

கட் என சொல்லும் போது என் உயிர் போய் நான் எழுந்திருக்கவே கூடாது. அந்த அளவுக்கு என்னுடைய உயிர் சினிமாவிற்காக இறக்கவேண்டும் நடித்துக்கொண்டிருக்கும் போதே என் உயிர் போனால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என ஷாருக்கான் பேசியிருக்கிறார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இவ்வளவு எமோஷ்னலாக மனுஷன் பேசுகிறாரே அந்த அளவுக்கு சினிமா மீது அவருக்கு காதல் இருக்கிறதை நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்