வடசென்னை 2 படத்தில் சிம்பு? சிறப்பா பண்ணுங்க- வாழ்த்தி அனுப்பிய தனுஷ்! நம்பவே முடியலையே…
Author: Prasad9 June 2025, 5:47 pm
எதிர்பார்ப்பின் உச்சம்
2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் 1980களின் காலகட்டத்தில் நடப்பது போன்ற கதையம்சம் கொண்டது. வடசென்னையில் வன்முறை கும்பல்களுக்கு மத்தியில் நடக்கும் பிரச்சனைகள் தான் இத்திரைப்படத்தின் மையக்கரு.

இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் “வடசென்னை பார்ட் 2” திரைப்படத்திற்கு பல வருடங்களாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் எந்த விழாவில் கலந்துகொண்டாலும் “வடசென்னை பார்ட் 2” குறித்த கேள்வி நிச்சயம் இருக்கும். “வடசென்னை பார்ட் 2” உருவாவதற்கான சூழல் விரைவில் அமையும் என்பது போல் பதில் கூறிவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள்.
இந்த நிலையில் “வடசென்னை பார்ட் 2” குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்றை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வடசென்னையில் சிம்பு?
அதாவது “வாடிவாசல்” திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் பரவியது. இத்திரைப்படம் “வடசென்னை பார்ட் 2” என சில தகவல்கள் தெரிவிக்கின்றனவாம்.
சமீபத்தில் ஒரு நாள் தனுஷை சந்தித்த வெற்றிமாறன், “நம்முடைய வடசென்னை பார்ட் 2 திரைப்படம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. ஆதலால் அத்திரைப்படத்தை சிம்புவை வைத்து இயக்கலாம் என்று நினைக்கிறேன்” என கூறினாராம். அதற்கு தனுஷும் “நல்லபடியாக பண்ணுங்கள்” என்று கூறி அனுப்பிவிட்டாராம். இவ்வாறு பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
ஆனால் வலைப்பேச்சு பிஸ்மி வேறு ஒரு தகவலை கூறுகிறார். அதாவது தனுஷை சந்தித்த வெற்றிமாறன், “வடசென்னை 2” படத்தை தொடங்குவதற்கு முன்பு சிம்புவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவுசெய்துள்ளதாக கூற, அதற்கு தனுஷ் வாழ்த்தி அனுப்பியதாக கூறியுள்ளார். ஆதலால் “வடசென்னை 2” படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புகள் இல்லை என்றே கூறுகின்றனர். வெற்றிமாறன் வேறு ஒரு கதையில் சிம்புவை வைத்து இயக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு எனவும் கூறப்படுகிறது.