மேடையில் இளையராஜா செய்த அந்த செயல்… அடுத்த நிமிடமே அமைதியான அரங்கம்…!

Author: Rajesh
20 March 2022, 12:06 pm

தமிழ் சினிமா ரசிகர்களை இன்று வரை தன் இசைiயால் கட்டி போட்டு இருப்பவர் தான் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா. தன்னுடைய பாடல்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் இசையாணி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ‘ராக் வித் ராஜா’ நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இன்னிசையில் பாடியதோடு ரசிகர்களை இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையவிட்டனர்.

இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜனனி ஜனனி என்றும் பாடலைப் பாடி ஆரம்பித்து இளையராஜா அதன் பிறகு தன்னுடன் பணியாற்றிய பாடகர்களை பற்றி பெருமிதமாக பேசினார். அத்துடன் தன்னுடைய திரையிசை பயணத்தையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது எஸ்பிபியை பற்றி இளையராஜா நினைவுகூர்ந்தார். என்னுடைய இசை பயணத்தில் எஸ்பிபிக்கு பெரும்பங்கு உண்டு. நாங்கள் 45 ஆண்டுகளாக நண்பர்களாகியிருந்தோம். ஆந்திராஇ கொல்கத்தா என எங்கு சென்றாலும் ஆர்மோனியப் பெட்டியுடன் நானும் பாலுவும் சென்ற பாடுவோம் என தனது அனுபவங்களை இளையராஜா பகிர்ந்தார். கொரோனாவால் பாதித்த எஸ்பிபி மறைவு தன்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியதாக இளையராஜா கூறினார். பின்பு எஸ்பிபிகாக அனைவரும் மௌன அஞ்சலி செலுத்துமாறு மேடையில் கூறினார். இதைக் கேட்ட அரங்கமே அமைதியானது.

இதனிடையே எஸ்பிபி பல பாட்டுக்கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் இளையராஜா தன் பாடல்களை ராயல்டி இல்லாமல் பாடக் கூடாது என அனைத்து பாடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் எஸ்பிபி மிகுந்த சிக்கலை சந்தித்தார். எஸ்பிபி, இளையராஜா இடையே மனகசப்பு இருந்தது. இந்நிலையில் எஸ்பிபியை நினைத்த இளையராஜா வருந்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் வெளியில் எதிரிகள் என்று கூறிக்கொண்டாலும் இன்றுவரை இளையராஜா, எஸ்பிபி மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து பாராட்டி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!