எல்லாரும் சிரிக்கிறாங்க… அசிங்கமா இருக்கு – அவமானத்தால் ஹன்சிகா எடுத்த முடிவு!

Author: Shree
10 July 2023, 5:10 pm

நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் தற்ப்போது ஹன்சிகா பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் இது குறித்த பேட்டி ஒன்றில், தமிழ் சினிமாவுக்கு வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இன்னும் தமிழ் சரியாக பேசுவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா,

“நான் தமிழில் பேசினால் செட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். அதனால் பேசுவதில்லை. படத்திற்காக சொல்லித்தரும் வசனத்தை மட்டும் பேசிவிடுவேன். அதுமட்டும் அல்லாமல் கொஞ்சம் முயற்சித்து தமிழ் ஓரளவு நன்றாக பேசினாலும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக தான் நான் பேசுவதே இல்லை என ஹன்சிகா கூறினார். அவமானப்படுத்தப்பட்டதால் இப்படி ஒரு முடிவெடுத்தாரா ஹன்சிகா? என எல்லோரும் செம ஷாக் ஆகிவிட்டார்கள்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்