சமந்தாவை வற்புறுத்திய நாகர்ஜூனா… 2வது திருமணத்துக்கு தயார்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2024, 4:50 pm

நடிகர் நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தா, பின்னர் விவாகரத்து பெற்றது இந்திய அளவில் பேசப்பட்டது.

இருவருக்கும் இடையில் என்ன காரணம் என்பதை இதுவரை உறுதிப்படுத்தாத தகவல்தான் வெளியானது. ஆனால் இருவரும் வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில் நாசசைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால் சமந்தா நோய்வாய்ப்பட்டு, பின்னர் குணமாகி மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

சமந்தாவை ஏமாற்றியது நாகர்ஜூனா குடும்பம்

முன்னாள் கணவரின் திருமணத்தை பற்றி மறைமுகமாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் சமந்தாவை ஏமாற்றியது நாகர்ஜூனாதான் என பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: விஜய் சேதுபதியிடம் நேருக்கு நேராக கேட்கணும்… பிக் பாஸ் வீட்டுக்குள் டுவிஸ்ட் வைத்த போட்டியாளர்!

சேகுவேரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “சமந்தா மிகவும் நேர்மையானவர். அவர் நாக சைதன்யா குடும்பத்தால் ஏமாற்றப்பட்டார் என்பதை உண்மையாக கூறலாம். அவருக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லை, ஆனால் சைதன்யாவின் குடும்பம் வற்புறுத்தி அந்த முடிவை எடுத்துக் கொண்டது.

Samantha Cheated By Nagarjunas Family

சமந்தாவின் தந்தையும் இறந்துவிட்டார், அதனால் அவர் மனகுறைபாடுகளையும் சந்தித்துள்ளார். நிச்சயமாக அவர் இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது, ஏனெனில் தனிமை மிகவும் கடுமையானது,” என்றார்..

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்